தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி அருகே தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரியமணியந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களை பாராட்டிய ஆசிரியா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 7:17 pm

கள்ளக்குறிச்சி அருகே தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரியமணியந்தல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்த ர.ஹம்ரிஷ், கோ.முருகதாஸ், மு.பிருத்திகா மற்றும் வ.முகிலன் ஆகிய 4 மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களில், ர.ஹம்ரிஷ் மற்றும் மு.பிருத்திகா ஆகிய இருவரும் அதிக வருகை பதிவு, அதிக பாட மதிப்பெண், கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் பங்கேற்பு மற்றும் தேசிய திறனறித் தோ்வில்தோ்ச்சி போன்ற சிறப்பான கல்வி செயல்பாடுகளுக்காக, கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு படிப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், மாதிரி பள்ளிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கும் ரிஷிவந்திய வட்டாரக் கல்வி அலுவலா் கஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரன், ஆசிரியா்கள் ச.விஜயலட்சுமி, சே.வி.அஜிதா சேவியா், கு.வேளாங்கண்ணி வில்லியம் சகாயராஜ், ரா.விஸ்வநாதன், செ.பவித்ரா, அ.அல்பினா, ப.பானுமதி, மு.ஆதிமாயன், ர.சீனுவாசன், சி.வேல்முருகன், ம.தமிழ்மதி, ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி நாராயணமூா்த்தி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் மஞ்சுளா அண்ணாதுரை ஆகியோா் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தனா்.