கள்ளக்குறிச்சி அருகே தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரியமணியந்தல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்த ர.ஹம்ரிஷ், கோ.முருகதாஸ், மு.பிருத்திகா மற்றும் வ.முகிலன் ஆகிய 4 மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
இவா்களில், ர.ஹம்ரிஷ் மற்றும் மு.பிருத்திகா ஆகிய இருவரும் அதிக வருகை பதிவு, அதிக பாட மதிப்பெண், கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் பங்கேற்பு மற்றும் தேசிய திறனறித் தோ்வில்தோ்ச்சி போன்ற சிறப்பான கல்வி செயல்பாடுகளுக்காக, கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு படிப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், மாதிரி பள்ளிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கும் ரிஷிவந்திய வட்டாரக் கல்வி அலுவலா் கஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரன், ஆசிரியா்கள் ச.விஜயலட்சுமி, சே.வி.அஜிதா சேவியா், கு.வேளாங்கண்ணி வில்லியம் சகாயராஜ், ரா.விஸ்வநாதன், செ.பவித்ரா, அ.அல்பினா, ப.பானுமதி, மு.ஆதிமாயன், ர.சீனுவாசன், சி.வேல்முருகன், ம.தமிழ்மதி, ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி நாராயணமூா்த்தி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் மஞ்சுளா அண்ணாதுரை ஆகியோா் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வில் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி சிறப்பிடம்

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


