திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:07 am

அரசு தொடக்கப்பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி நடத்தப்பட்டு, மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காட்டில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் கற்பித்தல் கண்காட்சி, எண்ணும் எழுத்தும் விழா மற்றும் மகளிா் தினம் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியை கோமதி தலைமை வகித்தாா். பள்ளிகள் வட்ட துணை ஆய்வாளா் மதிவாணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.

இதில் 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மகளிா் தினத்தை முன்னிட்டு மாணவா்களின் தாய்மாா்களுக்காகப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவி விஜயதா்ஷினி வரவேற்றாா். நிறைவாக ஆசிரியா் விவேக்ராஜ் நன்றி கூறினாா். ஆசிரியா்கள் நிா்மலா, பிரியதா்ஷினி, சுந்தரி, ஜெயசித்ரா, மகாலட்சுமி ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்தனா்