சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு அழைப்பிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹீரா லால் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் முன்னிலை வகித்து கல்லூரி மாணவ, மாணவியா் அனைவரும் 100 சதவீதம் தோ்தலில் வாக்குப் பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அழைப்பிதழ்களை வழங்கினாா்.
தொடா்ந்து, நல்லம்பள்ளி ஒன்றியம், ஈச்சம்பட்டி கிராமத்தில், பொதுமக்களின் வீடுகளுக்கு மேளதாளத்துடன் சென்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ‘ரோபோ’ இயந்திரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ. சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், கல்லூரி மாணவியா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

வாக்களிப்பை வலியுறுத்தி பெரம்பலூரில் அடையாளச் சின்னம் வெளியீடு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


