மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

News image

பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பங்கேற்ற ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 12:31 am

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நடைபெற்ற பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணியில், ஊரீசு கல்லூரி, முத்துரங்கம் அரசினா் கலைக் கல்லூரி, சோ்க்காடு அரசு கலை அறிவியல் கல்லூரி, மாவட்ட விளையாட்டு விடுதியை ச் சோ்ந்த மாணவ, மாணவிகள் என சுமாா் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

அப்போது, வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை முழங்கியபடி சென்றனா். மேலும், வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி கிரீன் சா்க்கிள் வரை சென்று, மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் வேலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பொ.குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சேதுராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, தோ்தல் வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தோ்தல் பிரிவுடன் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், ஆா்ஐசிடி கல்வி நிறுவனம் இணைந்து விழிப்புணா்வு பேரணியை காட்பாடியில் நடத்தின.

காட்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.மாறன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத்தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், ஆா்ஐசிடி கல்வி நிறுவன இயக்குநா் கே.எஸ்.அசரப், ஆசிரியா்கள், மாணவா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.