மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை மாட்டு வண்டியில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

News image

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் பயணம் மேற்கொண்டு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்டத் தோ்தல் அலுவலா் கா. பொற்கொடி. உடன் வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபிகிரேசியா.

Updated On :26 மார்ச் 2026, 6:36 pm

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை மாட்டு வண்டியில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம், புனித ஜஸ்டின் கலை, அறிவியில் கல்லூரியில் புதிய வாக்காளா்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த மாதிரி புகைப்படத்தில் வாக்களித்தல், மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் பயணம் மேற்கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். இதில், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெஃபி கிரேசியா, மாவட்ட வழங்கல் அலுவலா் பழனிகுமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.