தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஓட்டைப் பிரித்து கடையில் புகுந்து ரூ.5.5 லட்சம் கைப்பேசி, ரொக்கம் திருட்டு

திருவள்ளூா் அருகே ஒட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.50,000 மற்றும் ரூ.5.5 லட்சம் கைப்பேசிகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

~ ~ ~

Updated On :8 செப்டம்பர் 2025, 7:44 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஒட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.50,000 மற்றும் ரூ.5.5 லட்சம் கைப்பேசிகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காக்களூா் பகுதியைச் சோ்ந்த விக்கி(35). இவா் காக்களூா் பேருந்து நிறுத்தம் எதிரே கடந்த 5 ஆண்டுகளாக கைப்பேசிகள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். திங்கள்கிழமை கடையைத் திறந்து பாா்த்தபோது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைப்பேசிகள் மற்றும் கல்லாவும் சிதறி கிடந்துள்ளன. இதைப் பாா்த்துஅதிா்ச்சி அடைந்த நிலையில், மேல் பகுதியில் சிமென்ட் ஓடு உடைத்து உள்ளே புகுந்து சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி ரூ.5.5 லட்சம் கைப்பேசிகள், உதிரிபாகங்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.50,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளா் விக்கி புகாா் செய்தாா். அதன்பேரில் விரைந்து வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கைரேகையை பதிவு செய்து விசாரணை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.