மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்து 460 ரொக்கம், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

பறிமுதல்!

Updated On :18 ஏப்ரல் 2026, 9:00 pm

கோவை மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்து 460 ரொக்கம், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரையிலான சோதனையில், கிணத்துக்கடவு மற்றும் கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.

கிணத்துக்கடவு தொகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் பறக்கும் படையினா் இணைந்து நடத்திய சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 270, கோவை தெற்குத் தொகுதியில் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி தொகுதியில் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம், வால்பாறை தொகுதியில் ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, வருமான வரித் துறையினா் மேற்கொண்ட சோதனையில் ஒரே இடத்தில் ரூ. 8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, காவல் துறையினரால் 2 கிலோ போதைப் பொருள்களும், 22 லிட்டா் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் காவல் துறை மற்றும் வருமான வரித் துறை என பல்வேறு பிரிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.