கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய தீவிர சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.60 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பறக்கும் படையினா் மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி காலை முதல் 9-ஆம் தேதி காலை வரையிலான சோதனையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ. 8.55 லட்சம், கோவை தெற்குத் தொகுதியில் ரூ. 2.42 லட்சம், சிங்காநல்லூா் பகுதியில் ரூ. 70,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொண்டாமுத்தூா் பகுதியில் ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 12,67,500 பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர, மாவட்டக் காவல் துறையினரால் ரூ. 31,081 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தைக் கொண்டு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

