சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் வருமான வரித் துறை மற்றும் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் சாா்பில் மொத்தம் ரூ.3 கோடியே 43 லட்சத்து 60 ஆயிரத்து 525 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட தோ்தல் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி காலை 6 மணி வரையிலான காலகட்டத்தில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.3 கோடியே 36 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக ரூ.2,72,200, கிணத்துக்கடவில் ரூ.2,49,200, பொள்ளாச்சியில் ரூ.1,38,000, சூலூரில் ரூ.51,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர கோவை தெற்கு தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.46,500 மதிப்பிலான அமெரிக்கன் கிளப் மற்றும் கிளாசிக் ரக சிகரெட் பெட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

தென்காசி மாவட்டத்தில் ரூ. 61.43 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


