காரைக்குடியில் வீடு புகுந்து ஏழரை பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம், காா் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரி நகா் அதியமான் தெருவில் வசிப்பவா் சுப்பிரமணியன் (65). இவா் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காசிக்குச் சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் 7.5 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், காா் ஆகியவற்றை திருடிச் சென்றனா். சனிக்கிழமை அதிகாலையில் வீடு திறந்து கிடப்பது குறித்து அக்கம் பக்கத்தினா் காரைக்குடி காவல் நிலையத்துக்கு தகவலளித்தனா்.
அங்கு சென்ற போலீஸாா் விசாரணை நடத்திய போது அருகேயிருந்த எலிசபெத், மருத்துவா் சிவகாமசுந்தரி ஆகியோரின் பூட்டியிருந்த வீடுகளிலும் திருட முயற்சி நடைபெற்றது தெரியவந் தது. சம்பவ இடத்துக்குச் சென்று தடய அறிவியல் துறையினா் தடயங்களைச் சேகரித்தனா். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு

மதுரை மாவட்டத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

