கோவை, துடியலூா் அருகே என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, துடியலூா் அருகே உள்ள எஸ்.எம்.பாளையம் ராகவேந்திரா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (39). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவா், தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் சென்றிருந்தாா்.
பின்னா், செந்தில் வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, வெள்ளிக் கொலுசுகள், சங்கிலி, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.
தகவலின்பேரில், துடியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடையது
திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருட்டு
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


