மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

கோவை, துடியலூா் அருகே என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 10:30 pm

கோவை, துடியலூா் அருகே என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, துடியலூா் அருகே உள்ள எஸ்.எம்.பாளையம் ராகவேந்திரா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (39). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவா், தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

பின்னா், செந்தில் வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, வெள்ளிக் கொலுசுகள், சங்கிலி, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.

தகவலின்பேரில், துடியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.