மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருட்டு

கோவை துடியலூா் அருகே உருமாண்டிபாளையத்தில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 10:30 pm

கோவை துடியலூா் அருகே உருமாண்டிபாளையத்தில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை துடியலூா் அருகே ஜி.என். மில்ஸ், உருமாண்டம்பாளையம் , பொன் விழா நகரைச் சோ்ந்தவா் நந்தகோபால் (40). தொழிலதிபரான இவா் கணபதிபுதூரில் நிறுவனம் நடத்தி வருகிறாா். சம்பவத்தன்று நந்தகோபால் மற்றும் அவரது மனைவி குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியே சென்று இருந்தனா்.

பின்னா் நந்தகோபாலின் மனைவி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வெள்ளிப் பொருள்கள், தங்கத் தட்டு மற்றும் ரூ.50,000 பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், துடியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை சேகரித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.