மகுடஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள பெரியாண்டிபாளையம், அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி அருகில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளாா். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்படு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த ரொக்கம் ரூ. 25 ஆயிரம், 17 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமியின் மகன் முருகன் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

