திருவள்ளூா்: திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 47,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் கே.கே.ஆா். மில்லினியம் சிட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (45). இவரது தம்பி மனைவி உயிரிழந்த துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிங்கபெருமாள் கோயிலுக்கு சென்றாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினா். அப்போது, வெளியே கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 3 சவரன் நகை, ரூ. 47,000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து திருவள்ளூா் நகர காவல் நிலையத்தில் ஆனந்தன் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

