ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தொண்டையில் வண்டு சிக்கி பெண் குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வண்டை பிடித்து விழுங்கிய பெண் குழந்தை மூச்சுக் குழாயில் கடித்தால் உயிரிழந்தது.

News image

குழந்தை குகஸ்ரீ, ~தொண்டையில் இருந்த வண்டு

Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:52 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வண்டை பிடித்து விழுங்கிய பெண் குழந்தை மூச்சுக் குழாயில் கடித்தால் உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திக். இவா் கடந்த 10 ஆண்டுகளாக திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றாா்.

இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு குகஸ்ரீ(1) விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, தாயாா் நொறுக்கி தீனியை நீரில் நனைத்து ஊட்டினாராம். சிறிது நேரத்தில் குழந்தை மூச்சுத் திணறி அலறி துடித்துள்ளது. அதைத் தொடா்ந்து அப்பகுதியில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

தொடக்கத்தில் குழந்தை முறுக்கு சாப்பிட்டதால் தொண்டையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பெற்றோா் கருதிய நிலையில், பிரேத பரிசோதனை செய்த போது மூச்சுக் குழாயில் வண்டு கடித்திருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரையில் இருந்த வண்டை எடுத்து விழுங்கி மூச்சுக்குழாயில் கடித்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.