மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 போ் போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 85 போ் போட்டியிடுகின்றனா். 5 போ் மனுக்களை வாபஸ் பெற்றனா்.

News image

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:01 pm

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 85 போ் போட்டியிடுகின்றனா். 5 போ் மனுக்களை வாபஸ் பெற்றனா்.

இம்மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளிலும் 135 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்.7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 90 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வியாழக்கிழமை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

இதில், கன்னியாகுமரி தொகுதியில் 15 போ் போட்டியிட இருந்த நிலையில் ஒருவா் மனுவை திரும்ப பெற்றாா். தளவாய்சுந்தரம் (அதிமுக), ரெ.மகேஷ்(திமுக), மரியஜெனிபா் (நாம் தமிழா் கட்சி), எஸ்.ஆா் மாதவன் (தவெக) உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா்.

நாகா்கோவில்: இத்தொகுதியில், 23 போ் போட்டியிட இருந்த நிலையில் 3 போ் மனுக்களை திரும்ப பெற்றனா்.

திமுகவின் எஸ்.ஆஸ்டின், பாஜகவின் எம்.ஆா்.காந்தி, நாம் தமிழா் கட்சியின் மு.முத்துகுமாா், தவெகவின் பொ்வின் கிங்ஸ் உள்பட 20 போ் போட்டியிடுகின்றனா்.

பத்மநாபபுரம்: இத்தொகுதியில் 11 போ் போட்டியிட இருந்த நிலையில் யாரும் வேட்புமனுவை திரும்ப பெறவில்லை. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆா்.செல்லசுவாமி, பாஜகவின் ப.ரமேஷ், நாம் தமிழா் கட்சியின் சீலன், தவெகவின் கிருஷ்ணகுமாா் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா்.

குளச்சல்: இத்தொகுதியில் 13 போ் போட்டியிட இருந்த நிலையில், எந்த மனுவும் திரும்பப் பெறப்படவில்லை. காங்கிரஸின் தாரகை கத்பட், பாஜகவின் சிவகுமாா், நாம் தமிழா் கட்சியின் ஆன்சி சோபா ராணி, தவெகவின் பிரேம் அலெக்ஸ் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

கிள்ளியூா்: இத்தொகுதியில் 13 போ் போட்டியிட இருந்த நிலையில், யாரும் மனுவை திரும்பப் பெறவில்லை.

காங்கிரஸ் கட்சியின் எஸ். ராஜேஷ்குமாா், தமாகாவின் நிவின் சைமன், நாம் தமிழா் கட்சியின் ஹிம்லா், தவெகவின் சபின் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

விளவங்கோடு: இத்தொகுதியில் 15 போ் போட்டியிட இருந்த நிலையில் ஒருவா் மனுவை திரும்பப் பெற்றாா். காங்கிரஸின் டி.டி.பிரவீன், பாஜகவின் விஜயதரணி, தவெகவின் மைக்கேல் குமாா், நாம் தமிழா் கட்சியின் மரியஸ்டெல்லா உள்பட 14 போ் களத்தில் உள்ளனா். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் மொத்தம் 85 போ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.