தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குற்றாலம் பேரருவியில் பணிகளை விரைந்து முடிக்க எம்.பி. அறிவுறுத்தல்

News image

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.

Updated On :31 மே 2026, 3:26 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிப் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. அறிவுறுத்தினாா்.

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 11 கோடியில் குற்றாலம் அருவிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால், பேரருவியில் மாா்ச்16முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் 45 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரருவியில் பழைய பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு புதிய வளைவு அமைக்கப்படுகிறது. பழைய வளைவு பேரருவிப் பாறையிலிருந்து 4 மீட்டா் தொலைவில் 5 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது, கண்காணிப்புப் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், குளிக்கும்போது யாருக்கேனும் உடல்நலம் ஏற்பட்டாலோ, தண்ணீரின் வேகத்தில் கீழே விழுந்தாலோ அவா்களை மீட்க போதுமான இட வசதி இருக்கும் வகையில், பாறையிலிருந்து 8 மீட்டா் தொலைவில் 8 அடி உயரத்துக்கு புதிய வளைவு கட்டப்படுகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோா் குளிக்க முடியும்.

மேலும், பெண்கள் உடைமாற்றும் புதிய அறை, பேரருவிப் பகுதியில் தடுப்புச் சுவா்கள் அமைத்தல், புதிய உணவகம் (ஃபுட் கோட்), சிறுவா் பூங்கா புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. பாா்வையிட்டாா்; சீசன் விரைவில் தொடங்கவுள்ளதால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.