தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூரில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பெருங்கோட்டூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கோவையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இங்கு அவரது மனைவி கூலி வேலை செய்து வருகிறாா். இத்தம்பதியின் இரு மகள்களில் ஒருவா், 2018ஆம் ஆண்டு பெருங்கோட்டூா் அருகே ஆடு மேய்க்கச் சென்றாா். அப்போது, அதே ஊரில் உள்ள காலனி பகுதியைச் சோ்ந்த ச. முருகன் ( 62) அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கு, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பி. ராஜவேல் விசாரித்து, முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் மருதப்பன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








