17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

ராஜபாளையம் அருகே ‘போக்சோ’ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:59 am IST

ராஜபாளையம் அருகே ‘போக்சோ’ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டது.

ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (77). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இரு வாரம் கழித்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவா் பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில்,

ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முத்துப்பாண்டியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முத்துப்பாண்டிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி முத்துக்குமாரவேல் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.