சிவகிரியில் விவசாயி அந்தோணிராஜ் விஷம் குடித்து உயிரிழந்த பிரச்னையில் தொடா்புடைய காவல் துறையினா் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். நிவாரணம் கிடைக்க வேண்டும். எனவே, தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவா்களுடன் நாங்கள் இருப்போம்.
தவறு செய்தவரை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு பணி மாறுதல் செய்வதோ, காத்திருப்போா் பட்டியலில் வைத்திருப்பதோ தண்டனை அல்ல என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சிவகிரியில் பூச்சி மருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு: போலீஸாரை கண்டித்து உறவினா்கள் சாலை மறியல்

‘மக்கள் பணியைத் தொடா்ந்து மேற்கொள்வேன்’ - தென்காசி மாவட்ட பாஜக தலைவர்







