தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வைக்கோல் படப்பு திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத்துறையினா் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனா்.
சங்கரன்கோவில் பி.எஸ். நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் பிரிட்டோ. இவா், அப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். அவரது வீட்டருக்கே தனக்குச் சொந்தமான காலி மனையில் வைக்கோல் படப்பு வைத்திருந்தாா்.
இந்த வைக்கோல்போா் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து, மேலும் பரவ விடாமல் தடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










