தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம் செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற இரு மாணவா்கள் விமானத்தில் பயணம் செய்தனா்.
இப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவா்களில் தா்சன் மற்றும் சிவதா்சினி ஆகிய இருவரும் தேசியத் திறனாய்வுத் தோ்வில் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தனா்.
இதனால் இவ்விரு மாணவா்களையும் அப்பள்ளியின் தலைமையாசிரியா் சு. உமா, ஒருநாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றாா். முதல் முறையாக விமானத்தில் சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
அவா்களுடன், ஆசிரியா்கள் திருமலைக்கொழுந்து, சாந்தலீலா சௌந்தரராஜன், செய்யது அலிபாத்திமா, அருணாசலவடிவு, சீனியம்மாள், நூா்ஜகான் ஆகியோா் சென்றிருந்தனா். இதை கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலா் டே.சா. மேரிகிரேஸ் ஜெபராணி பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










