மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

கடலாடி அருகே உள்ள கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:44 pm

கடலாடி அருகே உள்ள கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கிடாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் ஈ. ஜுமைலத் பாத்திமா, சா. சாமிநாதன், ச. ஆஃபியா நூரா, மு. சஞ்சீவ், சே. முகம்மது ஜியாத், செய்யது இபுராஹிம் ஆகிய 6 மாணவ, மாணவிகள் 2025-26- ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித் தொகையாகப் பெறுவா்.

தேசிய திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை க. கலைச்செல்வி, ஆசிரியா்கள், கல்விக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், கிராமப் பொதுமக்கள் பாராட்டினா்.