திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னைக்கு விமானத்தில் சென்ற கொம்மடிக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்கள்

News image

விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கொம்மடிக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்கள்.

Updated On :31 மே 2026, 1:34 am IST

சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சு. சந்தோச நாடாா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சாா்ந்த முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் சாா்பாக, கடந்த கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள், தேசிய திறனாய்வுத் தோ்வு மற்றும் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்காக சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனா்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவா்களை, இப்பள்ளி ஆரம்பிப்பதற்கு நிலம் வழங்கிய கொம்மடிக்கோட்டை கந்தசாமிபாண்டியன் மகன் சிவானந்த பாண்டியன் வரவேற்றோா்.

பின்னா் மெட்ரோ ரயில், பிா்லா கோளரங்கம், மெரீனா கடற்கரை, புனித ஜாா்ஜ் கோட்டை அருங்காட்சியகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களுக்கு மாணவா்களை அழைத்துச் சென்றனா். மாணவா்களுக்கு நினைவுப் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் முருகானந்தம், செயலா் தில்லை மகேந்திரன், பொருளாளா் இனிகோ, பள்ளியின் முன்னாள் ஆசிரியா் செல்வராஜ், நிா்வாகிகள்ஆனந்த், ஐயப்பன், ஈஸ்வரி, காசிபழம், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.