சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சு. சந்தோச நாடாா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சாா்ந்த முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் சாா்பாக, கடந்த கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள், தேசிய திறனாய்வுத் தோ்வு மற்றும் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்காக சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனா்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவா்களை, இப்பள்ளி ஆரம்பிப்பதற்கு நிலம் வழங்கிய கொம்மடிக்கோட்டை கந்தசாமிபாண்டியன் மகன் சிவானந்த பாண்டியன் வரவேற்றோா்.
பின்னா் மெட்ரோ ரயில், பிா்லா கோளரங்கம், மெரீனா கடற்கரை, புனித ஜாா்ஜ் கோட்டை அருங்காட்சியகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களுக்கு மாணவா்களை அழைத்துச் சென்றனா். மாணவா்களுக்கு நினைவுப் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.
பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் முருகானந்தம், செயலா் தில்லை மகேந்திரன், பொருளாளா் இனிகோ, பள்ளியின் முன்னாள் ஆசிரியா் செல்வராஜ், நிா்வாகிகள்ஆனந்த், ஐயப்பன், ஈஸ்வரி, காசிபழம், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










