திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சட்டவிரோதமாக கனிமங்கள் அகழ்ந்தெடுப்பு: 67 கல்குவாரிகளில் பணிகள் நிறுத்தம்

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 67 கல்குவாரிகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

News image

கல் குவாரி - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 4:54 am IST

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 67 கல்குவாரிகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. அங்கு அரசு அனுமதி அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் வந்தன. அதேபோல, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளும் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கனிமவளத் துறை அமைச்சா் டாக்டா் டி.கே.பிரபு உத்தரவிட்டாா். அதன் தொடா்ச்சியாக கடந்த வாரத்தில் தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் அவா் திடீா் ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறி செயல்பட்டு வந்த கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.

முன்னதாக, அமைச்சரின் உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கனிம வளத் துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர சோதனை நடத்தினா். அதன்படி, 431 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில், 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 67 குவாரிகளின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 88 குவாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துசென்ற 469 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.