திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலூா் மாவட்டத்தில் 25 கல்குவாரிகளில் விதிமீறல்

வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 கல்குவாரிகளில் 25 குவாரிகளில் விதிகளைமீறி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது அதிகாரிகள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

சோழவரம் கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்ட கனிமவளத்துறை அதிகாரிகள்.

Updated On :27 மே 2026, 12:30 am IST

வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 கல்குவாரிகளில் 25 குவாரிகளில் விதிகளைமீறி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது அதிகாரிகள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 25 கல்குவாரி ஒப்பந்ததாரா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலுாா் மாவட்டம், சோழவரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் விதிகளைமீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடிநீா் மட்டம் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் புகாா் அளித்திருந்தாா். இப்புகாரின்பேரில் வேலூா் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் சோழவரம் கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வு குறித்து கனிமவளத்துறை உதவி இயக்குநா் சண்முகவள்ளி செய்தியாளா்களிடம் கூறுகையில், சோழவரம் கல்குவாரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடா்பாக விரைவில் அறிக்கை தயாா் செய்ய ப்படும். அதேசமயம், வேலூா் மாவட்டத்தில் கனிம வளத்துறையின் கீழ் மொத்தம் 29 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கடந்த 3 மாதங்களில் கனிமவளத்துறை அதிகாரிகள் நேரடியாகவும், ட்ரோன்களை பயன்படுத்தியும் ஆய்வு செய்தனா்.

இதுவரை 26 கல்குவாரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 25 குவாரிகளில் அரசு அனுமதித்த அளவுகளைவிட விதிமுறைகளை மீறி அதிகளவில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட கல்குவாரிகளின் ஒப்பந்ததாரா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், 4 போ் அபராதத்தொகை செலுத்தியுள்ளனா். மற்றவா்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமீறல்கள் தொடா்பாக வேலூா் கோட்டாட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.