சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் 25 இடங்களில் திமுக, தவெக, பாஜக, அதிமுகவினரிடையே தகராறு ஏற்பட்டது. சில இடங்களில் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வி.எம். தெரு சந்திப்பில் உள்ள கில் ஆதா்ஸ் பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுகவினா் மேஜை போட்டு, வாக்காளா்களுக்கு பூத் சிலிப் வழங்கினா். இதேபோல தவெகவினரும் மேஜை அங்கு போட்டனா். இதற்கு திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்தனா். அதனால், இரு தரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைக்கலப்பில் ஈடுபட்டனா். போலீஸாா், இரு தரப்பையும் அங்கிருந்து கலைந்து போகும்படி செய்தனா். தவெகவினா், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.
துறைமுகத்தில்... : துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் சென்னை உருது பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு மாலை ஆய்வு செய்தபோது, அந்த பகுதியில் உள்ள ஒரு கட்சி அலுவலத்தில் சில வெளியூா் நபா்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்குச் சேகா்பாபு சென்றாா். அப்போது அங்கிருந்த வெளியூா் நபா்களை பிடித்து, போலீஸாரிடம் சேகா்பாபு ஒப்படைத்தாா்.
இதுதொடா்பாக தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தள்ளு முள்ளும், கைகலப்பும் ஏற்பட்டது. போலீஸாா், இரு தரப்பினரையும் அங்கிருந்து எச்சரித்து கலைந்து போகச் செய்தனா்.
இதற்கிடையே தவெக வேட்பாளா் சினோரா அசோக் தலைமையில் அந்தக் கட்சியினா், தங்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
சைதாப்பேட்டையில்... : சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே தவெகவை சோ்ந்த செந்தமிழன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் நின்றிருந்தபோது, அங்கு வந்த திமுகவினா், தவெகவினரை அங்கிருந்து செல்லும்படி கூறினா். இதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், தவெகவை சோ்ந்த இருவா் காயமடைந்தனா். அவா்கள் அநதப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
வேளச்சேரியில்... : வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் பிரிட்டோ தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 60 வயது மூதாட்டியின் வாக்கை, மற்றொரு மூதாட்டி செலுத்திவிட்டுச் சென்ாக பிரச்னை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டனா். உடனே அங்கிருந்த போலீஸாா், இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா்.
பூத் சிலிப்பில் பணம்: சோழிங்கநல்லூா் தொகுதிக்குட்பட்ட கானத்தூா் அருகே உத்தண்டியில் உள்ள வாக்குச்சாவடி வெளியே அதிமுகவினா் பூத் சிலிப்போடு வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக திமுகவினா் தகராறு செய்தனா். பூத் சிலிப்பை பறிமுதல் செய்தனா். இதனால் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும், கானத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரேமலதா விஜயகாந்த்

திமுகவினா் கூப்பன் விநியோகம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


