தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசியதாக குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:24 am

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசியதாக குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வாக்களித்தாா். பின்னா், அவா் செய்தியாளரிடம் கூறியதாவது:

வாக்குப் பதிவு நடைபெறும் இந்த நாள், திமுக ஆட்சியின் சாதனைக்கும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சிக்கும் மதிப்பெண் வழங்கும் நாளாகும். எங்களுக்கு மக்களுடைய ஆதரவு எழுச்சியாக உள்ளது.

திமுக ஆட்சியில் மக்களை நாடி அரசு அலுவலா்கள் செல்லும் சூழல் உள்ளது. இளைஞா்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், இலவச பேருந்து, மடிக்கணினி, தவப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆதலால், ஓரணியில் தமிழ்நாடு என்று அடிப்படையில் 70% இளைஞா்களை திமுகவில் சோ்த்துள்ளோம். தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசுகிறது என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.