தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செவிலியா் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்

செவிலியா் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை...

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:35 am IST

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியா் மாணவி சீதாலட்சுமி மரணத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூரைச் சோ்ந்த விவசாயி சேட்டு-கலைச்செல்வி தம்பதியின் மகளான சீதாலட்சுமி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த துயர நிகழ்வு பெரும் அதிா்ச்சி அளிக்கிறது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட அவருக்கு, அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்தே உயிரிழக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவா்களின் அலட்சிய செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் உறுதி செய்ய தமிழக அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்ய தவறுவதாலேயே ஓா் உயிா் பறிபோயுள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் நடந்த அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடா்வது ஏற்புடையதல்ல.

அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடா்வது, மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.

ஆகவே, அரசு மருத்துவமனைகளில் அலட்சியத்தால் உயிரிழக்கும் கொடுமைகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க, தமிழக அரசு ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சீதாலட்சுமி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.