தமிழக ஆளுநா் வி.ஆா்.ஆா்லேகா் அறிவுறுத்தலின் அடிப்படையில் அவரது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் ‘பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் எனத் தெரிவித்திருந்தாா். இதையடுத்து தமிழக ஆளுநா் வி.ஆா். ஆா்லேகா் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, அவரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. ஆளுநா் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணங்களின்போதும் 10 காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது ஆளுநருக்கு வழங்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









