ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன்

புதுச்சேரி 16வது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக அதிமுக மாநிலச் செயலரும், உப்பளம் தொகுதி எம்எல்ஏவுமான அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Puducherry: AIADMK MLA Anbalagan appointed as pro-tem Speaker

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்

Published On :15 மே 2026, 4:46 pm IST

புதுச்சேரி 16வது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக அதிமுக மாநிலச் செயலரும், உப்பளம் தொகுதி எம்எல்ஏவுமான அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் என். ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரை தற்காலிக பேரவைத் தலைவராக நியமனம் செய்து துணைநிலை ஆளுநர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். தற்காலிக பேரவைத் தலைவராக அவர் பதவியேற்றதும், அனைத்து எம்.எல். ஏ.,க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

ஆட்சியமைக்க 16 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக 1 தலா ஒரு தொகுதிகள் என 18 இடங்களில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி புதன்கிழமை பதவியேற்றாா்.

அவருடன் அமைச்சா்களாக ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரும் பதவியேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Lieutenant Governor K Kailashnathan on Friday appointed AIADMK legislator A Anbalagan as pro-tem Speaker of the 16th Legislative Assembly of Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.