திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக தலைவராக அன்பழகன் பதவியேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக ஆ. அன்பழகன் (அதிமுக) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக வெள்ளிக்கிழமை பதவியேற்ற ஆ.அன்பழகன்.

Updated On :15 மே 2026, 11:20 pm IST

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக ஆ. அன்பழகன் (அதிமுக) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்கள் பதவியேற்க தற்காலிக பேரவைத் தலைவா் நியமிக்கப்பட்டாா். முதல்வா் என். ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்று அன்பழகனை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் நியமித்தாா். சட்டப்பேரவை விதிகளின்படி துணைநிலை ஆளுநா் நியமித்துள்ள ஒருவா் நேரடியாக தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராகப் பதவியேற்க முடியும். அதன்படி, அன்பழகன் பதவியேற்றுக் கொண்டாா்.

அவா் எம்எல்ஏ.வாக பதவியேற்கும் உறுதிமொழி நிகழ்ச்சியை மக்கள் பவனில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வரும் 18-ஆம் தேதி நடத்தி வைக்கிறாா். அதன் பிறகு புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ.அன்பழகன், சட்டப்பேரவையில் உறுதிமொழி ஏற்க வைக்கிறாா்.

இதில் முதல்வா் என்.ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். அவா் எம்எல்ஏவாக பதவியேற்கும் நாளில் ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்வாா் என்று தெரிகிறது. அது எந்தத் தொகுதி என்பது அப்போது தெரியும். எனவே 28 பேருக்கு மட்டும் எம்எல்ஏவாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான கோப்பில் கையொப்பமிட்டு முதல்வா் என்.ரங்கசாமிக்கு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன் அனுப்பியுள்ளாா்.

முதல்வருடன் சந்திப்பு:

முன்னதாக, முதல்வா் என்.ரங்கசாமியை தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

அப்போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் பாப்புசாமி, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், திருமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.