திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவரின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்

Updated On :25 மே 2026, 4:48 pm IST

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரின் ராஜிநாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக பேரவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து மூன்று பேரும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை வழங்கியிருந்தனர்.

அவர்களது ராஜிநாமா கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேரவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகிய மூவரும் மே 25 ஆம் தேதி முதல் தாங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்து முறைப்படி கடிதம் அளித்துள்ளனர்.

சட்டப்பேரவை விதிகளின்படி, இந்த ராஜிநாமா கடிதங்கள் முறையாக உள்ளதால் அவர்களது கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் மூவரும் முறைப்படி ராஜிநாமா கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்து, இவர்கள் மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ஏற்கனெவே, எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குத் தாவிய நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக 27 எம்.எல்.ஏக்களும், எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏக்களும், வேலுமணி தரப்பில் இருந்து மூன்று பேர் தற்போது தவெகவுக்கும் தாவியுள்ளனர்.

Summary

Assembly Speaker J.C.D. Prabhakaran has announced that the resignations of the three AIADMK MLAs from Maragatham Kumaravel, Sathyabama, and Jayakumar have been accepted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.