திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொறடா விவகாரம்: பேரவைத் தலைவருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீண்டும் சந்திப்பு!

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீண்டும் சந்திப்பு...

News image

கோப்புப் படம் - DIN

Updated On :15 மே 2026, 1:34 pm IST

சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் இன்று மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதிமுகவின் கொறடா யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் உள்ள நிலையில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, காமராஜ், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் பேரவைத் தலைவரைச் சந்தித்துள்ளனர்.

தங்கள் தரப்பை தனி அணியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தங்கள் தரப்பு சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும் கொறடாவாக சி. விஜயபாஸ்கரையும் நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சட்டப்பேரவையில் இருக்கையை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு தரப்பின் கடிதங்களும் ஆய்வில் உள்ளதாக பேரவைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிமுகவில் இபிஎஸ்ஸுக்கு எதிராக சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து சட்டப்பேரவையில் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் விஜய்யும் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதேபோல, அதிமுகவில் தாங்கள்தான் பெரும்பான்மை என்றும் தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

CV shanmugam team MLAs meet TN assembly speaker today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.