தமிழ்நாடு அமைச்சரவையில் இன்னும் 2 இடங்களே மீதமிருக்கும் நிலையில், அதிமுகவின் சி.வி. சண்முகம் தரப்புக்கு வழங்குவதில் சாத்தியமில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதல்வராக சி. ஜோசப் விஜய் மற்றும் அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸின் 2 அமைச்சர்களும், தவெகவின் 21 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு அமைச்சரவைக்கு அனுமதிக்கப்பட்ட 35 அமைச்சர்களில் இதுவரை 33 பேர் பொறுப்பேற்றுள்ளனர்.
விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை அமைச்சரவையில் இணைய தவெக அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுகவின் சி.வி. சண்முகம் தரப்புக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதிமுகவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளித்தால் தவெக அரசுக்கு அளித்த ஆதரவை பரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிகளும், விசிகவும் தெரிவித்திருந்தன.
புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப் போவதில்லை என்று தவெக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பெயர் இடம்பெறவில்லை.
மீதமுள்ள 2 இடங்களில் விசிக எம்.எல்.ஏ. ஒருவரும், ஐயூஎம்எல் எம்.எல்.ஏ. ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Is there a possibility for C.V. Shanmugam's faction to join the Cabinet?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








