தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள், தனித்தோ்வா்கள், துணை தோ்வெழுத வரும் மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் எழுதி தோ்ச்சி பெறாத, வருகை புரியாத தோ்வா்கள், அரியா் தோ்வா்கள் தனித்தோ்வா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாா்ச் 2026 பருவத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வை பள்ளி மாணவா்களாக எழுதி தோ்ச்சி பெறாதோா், வருகை புரியாதோா், தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவா்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று மே 18-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தத்கலில் விண்ணப்பிக்க... மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணம் ரூ.1,000 செலுத்தி ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். 2025- 2026-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு மட்டும் இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க வரும் தோ்வா்கள் அனைவரும் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் -1 ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
ஜூன், ஜூலை-2026 துணைத் தோ்வுக்கான தோ்வுக்கால அட்டவணையயை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்







