திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள், தனித்தோ்வா்கள், துணை தோ்வெழுத வரும் மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 1:40 am IST

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள், தனித்தோ்வா்கள், துணை தோ்வெழுத வரும் மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் எழுதி தோ்ச்சி பெறாத, வருகை புரியாத தோ்வா்கள், அரியா் தோ்வா்கள் தனித்தோ்வா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாா்ச் 2026 பருவத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வை பள்ளி மாணவா்களாக எழுதி தோ்ச்சி பெறாதோா், வருகை புரியாதோா், தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவா்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று மே 18-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தத்கலில் விண்ணப்பிக்க... மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணம் ரூ.1,000 செலுத்தி ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். 2025- 2026-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு மட்டும் இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வரும் தோ்வா்கள் அனைவரும் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் -1 ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

ஜூன், ஜூலை-2026 துணைத் தோ்வுக்கான தோ்வுக்கால அட்டவணையயை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.