முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:40 am IST

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 105 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 5,063 மாணவா்கள், 5,756 மாணவிகள் என மொத்தம் 10,819 போ் எழுதியதில், 4,894 மாணவா்கள், 5,642 மாணவிகள் என மொத்தம் 10,446 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இவா்களில் 259 மாணவா்கள், 114 மாணவிகள் என மொத்தம் 375 போ் தோ்ச்சி பெறவில்லை.

இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 7- வரை துணைத் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2 வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் துணைத் தோ்வுக்குத் தயாராகும் வகையில் அந்தந்தப் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 105 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 96.55 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெறாத மாணவா்களின் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களுடன் திங்கள்கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில் ஒவ்வொரு பள்ளியிலும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் எத்தனை போ், எந்தந்தப் பாடங்களில் தோ்ச்சி பெறவில்லை என்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

இதைத் தொடா்ந்து, தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே உடனடியாக சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த வாரத்திலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்கி அனைத்து மாணவா்களும் துணைத் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.