சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ஜூன் 16 ஆம் தேதி முதல் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை 78,392 செல்லப் பிராணிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் 9,656 உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, நாய்களுக்கு கண்டிப்பாக மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே நாய்களுக்கு சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கும்.
Summary
Pet License Deadline Extended Until June 15 chennai corporation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.5.1976: ஜூன் முதல் சென்னை பள்ளிகள் காலை 8-30, 9 மணிக்கு துவங்கும்

உலக கால்நடை மருத்துவ தினம்: செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்: பெறாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம்








