திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

27.5.1976: ஜூன் முதல் சென்னை பள்ளிகள் காலை 8-30, 9 மணிக்கு துவங்கும்

ஜூன் முதல் சென்னை பள்ளிகள் காலை 8-30, 9 மணிக்கு துவங்குவது பற்றி...

News image

27.5.1976 - Dinamani

Updated On :27 மே 2026, 4:00 am IST

சென்னை, மே. 26 - வரும் ஜூன் மாதத்தில் சென்னை நகரில் பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு அவை புதிய நேரப்படி இயங்கத் துவங்கும்.

தென் சென்னையில் உ ள்ள பள்ளிக் கூடங்கள் தினசரி காலை 8.30 மணி முதலே இயங்கத் துவங்கும். வட சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்கள் காலை 9 மணி முதல் இயங்கத் துவங்கும். போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக இந்த ஏற்பாடு.

பள்ளிப் படிப்புத் துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் பள்ளித் துறை இன்ஸ்பெக்டர்கள் எல்லா பள்ளிக் கூடங்களுக்கும் வாய்மொழி மூலமாக இந்த உத்தரவைத் தெரிவித்துள்ளனர். ...

மதுரை கோபுரத்தில் கிடந்த பிணம் - மின்சாரம் தாக்கி இறந்தான்

மதுரை, மே. 25- 12 வயதுள்ள ஒரு சிறுவனின் பிரேதம் மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலய கோபுரத்தின் 9-வது அடுக்கில் கிடந்தது என்று செய்தி வந்ததல்லவா? இதன் ரகசியம் இப்போது தெரிந்து விட்டது. வட இந்தியாவிலிருந்து வந்திருந்த சில யாத்ரீகர்கள் கோபுரத்தில் ஏறியபோது இந்தச் சடலத்தைக் கண்டுபிடித்துத் தகவல் கொடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பையனைப் பற்றிய விவரங்கள் கிடைத்தன. இந்தப் பையனின் பெயர் சாந்தாராம். மதுரையின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திராநகரில் வசிக்கும் ஒரு விதவையின் மகன் இவன்.

திங்கட்கிழமை காலை அவன் தன் வீட்டிலிருந்து புறப்பட்டானாம். அவன் மின்சாரத்தினால் தாக்கப்பட்டு பின்னர் உயிர் நீத்திருக்க வேண்டுமென்று போலீசார் கருதுகின்றனர். பிரேத பரிசோதனை செய்த டாக்டரும் இதை ஆமோதித்தார்.

Summary

From June, schools in Chennai will begin at 8:30, 9:00 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.