திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!

முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு உணவகத்தில் தீ விபத்து நேரிட்டதைப் பற்றி...

News image

தில்லியில் முதல்வர் விஜய்.

Updated On :11 ஜூன் 2026, 10:21 am IST

தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஜோசப் விஜய் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக தில்லிக்கு தனி விமானத்தில் புதன்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார்.

அதைத்தொடர்ந்து, தில்லி சாணக்கியா புரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் அவரை சம்பிரதாயப்படி தமிழக அரசின் தலைமைச் செயலர் மு.சாய்குமார், தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ஆர். ஜெயா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சிபி ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலர் டி. ராஜா உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் நேற்றிரவு தங்கியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், இன்று காலை புறப்பட்டார்.

அவர் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து நீதி ஆயோக் கூட்டத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களில் அங்குள்ள உணவகத்தில் தீ விபத்து நேரிட்டு கரும்புகை வெளியேறியுள்ளது.

தமிழ்நாடு அரசு இல்லத்தில் கீழ்த்தளத்தில் அமைந்திருக்கும் உணவு கூடத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயை உடனடியாக பணியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு, அங்கிருந்து கரும்புகை வெளியேறியிருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

Summary

A fire incident at the canteen of Tamil Nadu House in Delhi, where Chief Minister Vijay was staying, has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.