தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லியில் முதல்வர் விஜய்! தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை மரியாதை!

தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு தில்லியில் காவல்துறை மரியாதை...

News image

தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு காவல்துறை மரியாதை - ANI

Updated On :27 மே 2026, 1:37 pm IST

தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி சென்றுள்ள ஜோசப் சி. விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக தில்லி சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சென்ற விஜய்யை, தில்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து, தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய்க்கு, தில்லி திகாா் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Story image

ANI

மாலை 4.30 மணியளவில் பிரதமா் மோடியை முதல்வா் விஜய் சந்தித்துப் பேச உள்ளாா். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்டவை குறித்தும், தமிழகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்துவாா் என்று கூறப்படுகிறது.

இரு நாள் பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சிக்கிம் சென்றுள்ளதால் மே 28-ஆம் தேதி அவா் தில்லி திரும்பிய பிறகு முதல்வா் விஜய் அவரை சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாா்.

இதனிடையே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா உள்ளிட்டோரையும் விஜய் சந்திக்கவுள்ளார்.

இருநாள்கள் பயணத்தை முடித்துவிட்டு, நாளை மாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

TN CM Vijay in Delhi - Police Honors at Tamil Nadu House

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.