நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்

News image
தமிழ்நாடு தகவல் ஆணையம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்கள் பதவியேற்ற நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் பணியாற்றுவாா்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தா் பணியாற்றி வருகிறாா். மேலும், தகவல் ஆணையா்களாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரை கண்ணன், வழக்குரைஞா்கள் ஆா்.பிரியகுமாா், வி.பி.ஆா்.இளம்பரிதி, கே.திருமலைமுத்து, எம்.நடேசன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.