தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு புதிய மாநில தகவல் ஆணையா்கள் நியமனம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு புதிய மாநில தகவல் ஆணையா்கள் நியமனம்...

News image
Updated On :6 மார்ச் 2026, 9:22 pm

தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு இரு புதிய மாநில தகவல் ஆணையா்கள் பதவியேற்றனா். இவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (மத்திய சட்டம் 22/2005) பிரிவு 15 -இன் துணைப் பிரிவு (3) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆளுநா் ஆா்.என்.ரவி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோரை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநில தகவல் ஆணையா்களாக நியமித்துள்ளாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதுல்ய மிஸ்ரா, அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக ஆளுநா் ஆா். என். ரவி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தலைமை தகவல் ஆணையா் ஷகீல் அக்தா், மனிதவள மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலா் சி. சமயமூா்த்தி, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆா். கிா்லோஷ் குமாா், மாநில தகவல் ஆணையா்கள் பங்கேற்றனா்.