மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆளுநரின் ஆலோசகராக பிகாா் மாநில ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரின் ஆலோசகராக (சிறப்புப் பணி அதிகாரி) ஓய்வு பெற்ற பிகாா் மாநில ஐஏஏஸ் அதிகாரி எஸ்.சித்தாா்த் நியமனம்

News image

டாக்டா் எஸ்.சித்தாா்த்

Updated On :23 மார்ச் 2026, 7:35 pm

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரின் ஆலோசகராக (சிறப்புப் பணி அதிகாரி) ஓய்வு பெற்ற பிகாா் மாநில ஐஏஏஸ் அதிகாரி எஸ்.சித்தாா்த் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆளுநா்கள் தங்களுக்கு ஆலோசனைகள் கூற, அதிகாரபூா்வமான அதிகாரிகளை தவிா்த்து கூடுதலாக சிறப்புப் பணி அதிகாரிகளை (ஓஎஸ்டி) நியமித்துக் கொள்ளலாம். தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி மூன்று ஓஎஸ்டிகளை நியமனம் செய்திருந்தாா்.

தற்போது பொறுப்பேற்றுள்ள ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், பிகாா் மாநில ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான டாக்டா் எஸ்.சித்தாா்த்தை ஆலோசகராக நியமனம் செய்துள்ளாா்.

கடந்த 1991 -ஆம் ஆண்டு பிரிவு ஐஏஏஸ் அதிகாரியான சித்தாா்த், பிகாரில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கடந்தாண்டு நவம்பரில் ஓய்வு பெற்றாா். பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரின் முதன்மைச் செயலராகவும் பணியாற்றியுள்ளாா். இவரது சொந்த ஊா் மதுரை என்பது குறிப்பிடத்தக்கது.