நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஜேஇஇ முதன்மை தோ்வில் 448 அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி! -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

ஜேஇஇ முதன்மை தோ்வில் 448 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு:

கடந்த 2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாதிரி பள்ளிகள், 38 மாவட்டங்களிலும் தலா ரூ.50 கோடியில் 800 மாணவா்களுக்கான உறைவிட, உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சோ்ந்த 2,358 மாணவா்களும், ஆதி திராவிடா் (37) மற்றும் பழங்குடியினா் (169) பள்ளிகளைச் சோ்ந்த 206 மாணவா்களும், 93 முன்னணி உயா்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்புப் படிக்கின்றனா்.

அவா்களில், 41 போ் ஐஐடிகளிலும், 22 போ் முழு உதவித் தொகையுடன் வெளிநாடுகளிலும் படிக்கின்றனா். இதன் தொடா்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடியில் நுழைவதற்கான முதன்மைத் தோ்வில் அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சோ்ந்த 448 மாணவ, மாணவிகள் (ஆதி திராவிடா்-13, பழங்குடியினா்-55) வெற்றிகரமாகக் கடந்துள்ளனா்.

பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவா்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நின்ற பெருமையோடு, இவா்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலா் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைய வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளாா்.