ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026: காரசார விவாதம் - நேரலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர்பான முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Published On :7 ஆகஸ்ட் 2026, 10:18 pm IST

உத்தரகண்டைச் சேர்ந்த பெண் உலகிலேயே மிக நீண்ட கூந்தலைக் கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை உயர்ந்துள்ளது.

பேரவையில் அனைவருக்கும் பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தவெக ஆட்சியில் 3 சதவிகிதம் கமிஷன் கொடுத்தால்தான் வேலை நடப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழ்நாடு அரசுக்கு நியாயமான வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3 வனவிலங்கு சரணாலயங்கள், 12,500 ஏக்கர் காடுகள், 700 ஆண்டுகள் பழைமையான நீர்மருந்து மரங்கள் என பலவற்றை அழித்துவிட்டுத்தான் மேக்கேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டவுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்: சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி

தில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம்கோரி மக்களவை பொதுச் செயலாளருக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்துகொள்வார்களா என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை என்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு மக்களுக்காக அவமானப்படவும் தயாராக இருந்ததால்தான் பெங்களூர் பயணத்தை திட்டமிட்டேன் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.