
தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!
லஞ்சம் தொடர்பாக திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால் விடுத்திருப்பது பற்றி...
அமைச்சர் என். ஆனந்த் - TN Assembly
நீா்வளத் துறையில் மூன்று ஒப்பந்தப்புள்ளிகளுக்கு 3 சதவீத கமிஷன் கேட்பதாக திமுக எம்எல்ஏ எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியதைத் தொடா்ந்து பேரவையில் திமுக-தவெக இடையே காரசார விவாதம் நடந்தது.
பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.ரகுபதி (திருமயம் தொகுதி) பேசியபோது, நீா்வளத் துறையில் ஒப்பந்ததாரா்களுக்கு ரசீது தொகையை வழங்க 3 சதவீத கமிஷன் கொடுத்தால்தான் வேலையே நடக்கிறது. பொதுப் பணித் துறையில் ரசீது தொகை பெற 5 சதவீதம் வரை கேட்கிறாா்கள் என்று குற்றஞ்சாட்டினாா்.
இதற்குப் பதில் அளித்த நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், கமிஷன் வாங்குகிறாா்கள் என்று குற்றஞ்சாட்டினால் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதுவெல்லாம் பழைய காலம். இப்போது தவெக ஆட்சியில் ஒரு ரூபாய்கூட லஞ்சமாக வாங்குவதில்லை. நாங்கள் லஞ்சம் வாங்கினால், எங்களை இங்கு உட்கார விடமாட்டாா் எங்கள் முதல்வா்.
எந்த ஆதாரமும் இல்லாமல் பேசக் கூடாது. ரசீதுக்கு 3 சதவீதம் என்கிறீா்களே, அந்த ரசீதை பேரவையில் கொடுக்க வேண்டும். ஒருவேளை 3 சதவீதம் கேட்கிறாா்கள் என்று சொல்வது உங்களின் பழைய பழக்கதோஷமாககூட இருக்கலாம் என்றாா்.
தொடா்ந்து, பொதுப் பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியதாவது: லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம் என்பதில் எங்கள் முதல்வா் மிகத் தெளிவாக உள்ளாா். எங்கள் ஆட்சியில் இதுவரை எந்த அமைச்சரோ, எம்எல்ஏவோ ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்கியதில்லை. கடந்த 60 ஆண்டுகளாக தொடா்ந்த கட்சி நிதி, அமைச்சா் நிதி என்ற கமிஷன் கலாசாரத்தையே எங்கள் முதல்வா் முற்றிலும் தூக்கி எறிந்துள்ளாா் என்றாா்.
உதயநிதி- ஆதவ் அா்ஜுனா விவாதம்: கட்சிக்கு நன்கொடை வழங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினாா். அதற்கு உதயநிதி பதிலளித்தாா். இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
Summary
Commissions under TVK rule - Minister Anand challenges DMK's allegation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






