
புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சி., ஷோபாவை வணங்கி... பேரவையில் அமைச்சர் ஆனந்த் பேச்சு!
நீர்வளத்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் ஆனந்த் பேசியது...
அமைச்சர் ஆனந்த் - TN Assembly
முதல்வர் ஜோசப் விஜய்யையும், அவரது பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை வணங்கி அமைச்சர் ஆனந்த் தனது உரையை சட்டப்பேரவையில் தொடங்கினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான என். ஆனந்த் இன்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து பேசுகையில்,
“தமிழ்நாடு முதலமைச்சரை வணங்கி, புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சி. ஷோபா சந்திரசேகரையும், தவெக கொள்கை தலைவர்கள் பெரியார், காமராசர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை வணங்கி...” தனது பேச்சைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருவதற்கு நாள்தோறும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாள்தோறும் ஒரு அறிவிப்பை முதல்வர் வெளியிடுகிறார். எங்களிடம் முதல்வர் எதிர்பார்ப்பது ஒன்றுதான். எக்காரணம் கொண்டும் மக்கள் பணத்தில் ஒரு ரூபாய்கூட எடுக்கக் கூடாது என்பதுதான். தவெகவின் அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என்பதை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
Summary
Minister Anand speaks at the assembly, paying respects to Revolutionary Director S.A.C. and Shoba...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





