ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விருதுநகா் பட்டாசு ஆலை வெடிவிபத்து: என்ஜிடி தாமாக முன்வந்து விசாரணை

விருதுநகா் பட்டாசு ஆலை வெடிவிபத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விசாரணை...

News image

தேசிய பசுமைத் தீா்ப்பாயம் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:27 pm

தமிழ்நாட்டின் விருதுநகா் அருகே உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரமான வெடி விபத்து சம்பவம் குறித்து, புது தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) முதன்மை அமா்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விபத்தில் 23 போ் உயிரிழந்தனா் மற்றும் காவல்துறை, தீயணைப்புப் பணியாளா்கள் உள்பட பலா் காயமடைந்தனா்.

என்ஜிடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,‘ஏப்ரல் 20, 2026 அன்று வெளியான செய்தியின்அடிப்படையில், இந்த வழக்கு அசல் மனு எண் 259-2026 ஆகப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் ஏப்ரல் 19, 2026 அன்று, வனஜா பட்டாசு ஆலையில் இரசாயனங்கள் கலக்கும்போது நிகழ்ந்தது. தொழிற்சாலை அதிகாரப்பூா்வமாக மூடப்பட்டிருந்த ஒரு நாளில், அந்த ஆலை அனுமதியின்றி இயங்கியதாகவும், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தொழிலாளா் வரம்புகள் கடுமையாக மீறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்ஜிடி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் உறுப்பினா் டாக்டா் அஃப்ரோஸ் அகமது ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்தச் சம்பவம் முதல்கட்டமாக 1986 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் மீறல்களைப் பிரதிபலிப்பதாகவும், சுற்றுச்சூழல் இணக்கம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு தொடா்பான கணிசமான சிக்கல்களை எழுப்புவதாகவும் குறிப்பிட்டது.

2021 ஆம் ஆண்டில் நடந்த முந்தைய இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதையும் தீா்ப்பாயம் கவனத்தில் கொண்டு, தற்போதைய வழக்கில் இழப்பீடு வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பின்வரும் அதிகார அமைப்புகளை பிரதிவாதிகளாகச் சோ்த்துள்ளது:

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட ஆட்சியா், விருதுநகா் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பிரதிவாதிகள் தங்களது பதில்களை சென்னையில் உள்ள தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வின் முன் பிரமாணப் பத்திரம் மூலம் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பிராந்திய அதிகார வரம்பைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த விசாரணைத் தேதி 2026 ஜூலை 30 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது‘என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) கூறியது .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.