மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

News image

உயா்நீதிமன்றம்

Updated On :12 மார்ச் 2026, 12:12 am

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், தனது இருசக்கர வாகனத்தில் 16 மற்றும் 14 வயது சிறுமிகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றாா். மதுராந்தகம் செல்லும் வழியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் விபத்தை ஏற்படுத்தி, 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா். சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தநிலையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை ஆஜரான வழக்குரைஞா் சூரியபிரகாசம், தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மதுராந்தகத்தில் சிறுமிக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தாா். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் இதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனா்.